Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திவ்யா கண்ணீர் குற்றச்சாட்டு..சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகருக்கு போலீஸ் சம்மன்!
சென்னை : நடிகை திவ்யா, தனது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறிய குற்றச்சாட்டின் பேரில், நடிகர் அர்னவ் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நடிகை திவ்யா கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவை காதலித்தார். இதையடுத்து, இருவரும் 5 வருடத்திற்கு மேலாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் திருமண போட்டோவையும் கர்ப்பமாக இருப்பதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா வெளியிட்டு இருந்தார்.
அப்போ
ஓவியா..
இப்போ
திவ்யா..
ஆபாச
பேச்சு..
பயில்வான்
ரங்கநாதன்
மீது
புகார்
கொடுத்த
சமூக
ஆர்வலர்!

திவ்யா கண்ணீர் பேட்டி
5 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த இந்த காதல் ஜோடி தங்கள் குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து கும்மியடித்து வருகின்றனர். காதல் கணவர் அர்னவ், என் கருகலையும் அளவுக்கு தாக்கியதாக கூறி மீடியாக்கள் முன் கதறினார். மேலும்,செல்லம்மாள் சீரியல் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் பேச்சை கேட்டுக்கொண்டுதான் தன்னை அடிப்பதாக கூறினார்.

மதம் மாறினேன்
மேலும், அவர் பல பெண்களுடன் தொடர்புவைத்து இருக்கிறார். மலேசியவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பணம் வாங்கி உள்ளார் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மதம் மாறினால் தான் வீட்டில் பெற்றோர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று அர்னவ் கூறியதால், அவருக்காக மதம் மாறினேன் என பல புகார்களை கூறினார்.

எல்லாமே பொய்
திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்த அர்னவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று போட்டோ ஆதாரங்களை காட்டினார். நாங்கள் காதலித்தது சேர்ந்து வாழ்ந்தது எல்லாம் உண்மை தான். அவர் திருமணம் ஆனவர் என்பது தெரிந்து தான் அவரை காதலித்தேன். ஆனால், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான், இந்த ஜனவரியில் தான் விவாகரத்தானது தெரிந்தது என்றார். மேலும் அவர் மனநோயாளி என அர்னவும் தன் பங்குக்கு பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

சிக்கலில் சீரியல் நடிகர்
இந்நிலையில் சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அர்னவ் நாளை மறுதினம் 14ம் தேதி நேரில் ஆஜராகும் படி போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.