Don't Miss!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எங்களை பார்த்தால் எப்படி தெரியுது?: யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்த போலீஸ்
Recommended Video
சென்னை: போலீசார் யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ஆடி கார் திருடு போனதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனது டிரைவரான நவாஸ் கான் தான் அந்த காரை திருடியதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் கார் திருடு போகவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நவாஸ் அவர் தங்கியிருக்கும் அபார்ட்மென்டின் அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கியிருக்கிறார்.
தூங்கிய மனிதர் தூக்கம் கெடாமல் இருக்க தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். யுவன் வீட்டில் உள்ளவர்கள் காரை தேடியபோது அது இல்லை, மேலும் நவாஸையும் காணவில்லை. உடனே கார் திருடு போனதாக போலீசில் புகார் அளித்துவிட்டனர்.
இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவர் தூங்கியதற்கு எல்லாம் கார் திருடு போய்விட்டது என்று புகார் அளித்து தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று போலீசார் யுவனை எச்சரித்துள்ளார்களாம்.