Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எங்களை பார்த்தால் எப்படி தெரியுது?: யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்த போலீஸ்
Recommended Video
சென்னை: போலீசார் யுவன் ஷங்கர் ராஜாவை எச்சரித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ஆடி கார் திருடு போனதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் தனது டிரைவரான நவாஸ் கான் தான் அந்த காரை திருடியதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் கார் திருடு போகவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நவாஸ் அவர் தங்கியிருக்கும் அபார்ட்மென்டின் அன்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கியிருக்கிறார்.
தூங்கிய மனிதர் தூக்கம் கெடாமல் இருக்க தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். யுவன் வீட்டில் உள்ளவர்கள் காரை தேடியபோது அது இல்லை, மேலும் நவாஸையும் காணவில்லை. உடனே கார் திருடு போனதாக போலீசில் புகார் அளித்துவிட்டனர்.
இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவர் தூங்கியதற்கு எல்லாம் கார் திருடு போய்விட்டது என்று புகார் அளித்து தங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று போலீசார் யுவனை எச்சரித்துள்ளார்களாம்.