Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அவர் சமீபத்தில், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
திமுக தலைவர் ஸ்டாலினை, திவ்யா சத்யராஜ் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள திவ்யா, ஸ்டாலினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " எனது தந்தை சத்யராஜ், கலைஞரின் இயக்கத்தில் நடித்ததில் இருந்தது, எங்கள் இரண்டு குடும்பத்துக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையையும், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்து குறித்தும் என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அது குறித்து அவரிடம் ஆலோசித்தேன்.
ஸ்டாலின் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உண்மை தான். ஆனால் இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.
தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பிரிவில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, இரும்பு சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் ரத்த சோவை நோய் ஏற்படுகிறது. எனவே இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தான் ஸ்டாலின் அவர்களுடன் நிறைய பேசினேன்", என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.