காதலும் காமமும் இயற்கையே: 'மூடர்கூடம்' நவீன்
சென்னை: காதலும் காமமும் இயற்கையே என்று இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பயங்கரம் குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அந்த காமக்கொடூரன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் நவீனும் ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நவீன்
காமஉணர்வு என்பது பாவச்செயல் அசிங்கம் என்று கற்பிப்பதால், பெண்கள் வஞ்சிக்கபடும்போது வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். காதலும் காமமும் இயற்கையே. ஒருவனை நம்பி காரில் ஏறிச் சென்ற பெண் எந்த விதத்திலும் குற்றமற்றவளே. அவளை எக்ஸ்ப்ளாய்ட் செய்த சைக்கோ நரிகள் தண்டனைக்குறியவர்களே #PollachiRapists என்கிறார் நவீன்.
உண்மை
நவீனின் ட்வீட்டை பார்த்துவிட்டு இந்த நபர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை.

பலம்
7 ஆண்டுகளாக அந்த கும்பல் பெண்களை சீரழித்து வந்துள்ளது. குடும்பம், சமூகம் பற்றி பயந்து பெண்கள் அதை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். தற்போதும் அந்த பெண்களை குறை சொல்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
தப்பு செஞ்சவனுங்கள விட்ருங்க. அவனுகள அரஸ்ட் பண்ணுங்கடானு போராட்டம் செஞ்சவங்கள அரஸ்ட் பண்ணுங்க. என்னங்கடா உங்க ஆட்சி?
#ArrestPollachiRapists #PollachiSexualAbuse என்று குமுறியுள்ளார் நவீன்.


Click it and Unblock the Notifications











