Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அந்த குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு.. கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது.. 'தல' கலந்துக்குவாரா?
|
விவேக்
தெறி படத்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு விஜய் அளித்த தண்டனை பற்றிய ஓவியத்தை தனது ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார் விவேக். படம் போட்டு தண்டனை பற்றி சொல்லாமல் சொல்லியுள்ளார்.
|
பெண்கள்
முன்னதாக விவேக் பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ட்வீட் செய்ததை பார்த்த ஒருவர் அந்த பெண்கள் மீது தான் தவறு என்றார். இதை பார்த்த விவேக் கோபம் அடைந்தார்.
|
பார்வை
பெண்களின் மீது குறை கூறிய நபருக்கு பதில் அளித்து விவேக் ட்வீட்டியதாவது, 'உன்ன மாதிரி இருக்குறவங்க தான் இதுக்கு காரணமே. உங்க பார்வை எல்லாம் பெண் மேல மட்டும் தான் இருக்கு. அவ வாழ்க்கைய நீங்க ‘காப்பாத்தி' ‘மீட்டெடுத்து' ‘செதுக்கி' கிழிச்ச வரைக்கும் போதும்.
அங்க நீ கவனிக்க விட்டுட்ட ஆண்கள் என்ன மிருகங்களா மாறி இருக்காங்கன்னு கண் வாடகைக்கு வாங்கியாவது பாரு' என்று விளாசினார்.
பணம்
பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பலரும் குறை கூறுகிறார்கள். சிலரோ ஒருபடி மேலே போய் பணத்திற்காக அந்த பெண்கள் தங்களை அழைத்த இடத்திற்கு சென்றதாக மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.