சின்மயிக்கு கிடைத்த அடுத்த சான்ஸ்.. வான் தூறல்கள் வாழ்த்துக்கள் பாடுகிறது
சென்னை: ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் செகண்ட் சிங்கிளான "வான் தூறல்கள்" பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மீ டூ விவகாரத்தால், பாடும் வாய்ப்புகள் குறைந்த நிலையில், மீண்டும் கோவிந்த் வசந்தா இசையில் இந்த பாடலை சின்மயி பாடியுள்ளார்.

உமா தேவி வரிகளில், வெளியாகியுள்ள "வான் தூறல்கள்" பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு கொஞ்ச காலம் ஓய்வு கொடுத்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பில் வரிசையாக பல படங்களில் ஜோதிகா அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியான தம்பி படம் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படம் உருவாகி வருகிறது.
96 படத்தில் அழகான காதல் பாடல்களை கொடுத்து தமிழ் ரசிகர்களை வசீகரித்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இயக்கத்தில் உருவாகி உள்ள வான் தூறல்கள் பாடலை பாடகி சின்மயி பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











