ரஜினிக்காக அன்னை ஆதிபராசக்தியிடம் பிரார்த்திக்கிறேன்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: காயம் அடைந்த ரஜினிகாந்த் விரைவில் குணமடைய ஆதிரபராசக்தியிடம் பிராத்தனை செய்வதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. நேற்று சென்னை அருகே உள்ள மேலகோட்டையூரில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது கால் தவறி விழுந்த ரஜினிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரை மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Comments


Click it and Unblock the Notifications