Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிக் பாஸ் பீவரில் இருந்து விடுபடாத பொன்னம்பலம்... பாக்குறவங்களுக்கு எல்லாம் பேர் வைக்கிறாரு!
நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் மூடில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், அந்த மூடில் இருந்து அவர் இன்னும் வெளி வரவில்லை என்றே தோன்றுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் 15 போட்டியாளர்களில் ஒருவராக நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான பொன்னம்பலம் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் சுமார் ஐந்து வாரங்கள் தாக்குப்பிடித்து வெளியேறினார் அவர். அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, சக போட்டியாளரான டேனியல் எல்லோருக்கும் பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டார். போட்டியாளர்கள் எல்லோருமே பொன்னம்பலத்தை சித்தப்பா என்றே அழைத்தனர்.
கலாச்சாரம்
கலாச்சாரத்தை பற்றியும், பண்பாட்டை பற்றியும் பேசி சர்ச்சையையும் ஏற்படுத்தினார் பொன்னம்பலம். மகத், யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி அவர் கூறிய சில கருத்துகள் விவாதத்துக்கு உள்ளானது.
முதல் முறையாக
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக, காட்டேரி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன்னம்பலம் கலந்துகொண்டார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம்.
அடிக்கடி பிக் பாஸ்
செய்தியாளர்களிடம் பொன்னம்பலம் பேசும் போதும், அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியே குறிப்பிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி போல், காட்டேரி படத்தின் இயக்குனர் டீகேவுக்கு பட்டப் பெயர் ஒன்றையும் அவர் வைத்தார்.
டிராகுலா கிங்
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு 'டிராகுலா கிங்' என்கிற பட்டத்தை வழங்குகிறேன்" என கூறினார்.
செய்தியாளர்கள் கமெண்ட்
அவர் இவ்வாறு பேசியதும், பொன்னம்பலம் சித்தப்பா பிக் பாஸ் மூடில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என செய்தியாளர்கள் கமெண்ட் அடித்தனர்.