Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 2.O சாதனையை முறியடித்த PS 1… ரஜினியின் கோட்டையை தகர்த்த மணிரத்னம்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வரும் பொன்னியின் செல்வன் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.
மணிரத்னம் என்ன கிழிச்சிருவாருன்னு பாக்க போனேன்... பார்த்திபன் பளிச் பேட்டி
மணிரத்னம் செய்த மேஜிக்
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், எம்ஜிஆர் முதல் கலம்ஹாசன் வரை பல ஜாம்பவான்களின் கனவுப் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. மணிரத்னத்தின் விடாமுயற்சியாலும் லைகாவின் பிரம்மாண்டமான பட்ஜெட்டாலும் சாத்தியமாகியுள்ள இந்தப் படம், பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸில் கலக்கல்
தமிழ்த் திரையுலகின் பலவருட கனவுப் படமான பொன்னியின் செல்வனுக்கு உலகம் முழுவதும் தரமான ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். பொன்னியின் செல்வன் இதுவரை உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான 10 நாட்களில் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, இந்திய திரையுலகையே மிரள வைத்துள்ளது. மணிரத்னம் சொன்னபடி மாஸ் காட்டிவிட்டார் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் சாதனை
பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல், இசையில் ஏஆர் ரஹ்மான், ஒளிப்பதிவில் ரவிவர்மான் என டெக்னிக்கலாகவும் மிரட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்துவிட்ட பொன்னியின் செல்வன், மொத்தமாக 350 கோடி வரை வசூலித்துள்ளதாம். இப்போது அமெரிக்காவிலும் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ரஜினியின் சாதனை தகர்ப்பு
அமெரிக்காவில் எப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும். 2019ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூல் செய்து டாப்பில் இருந்தது. ஆனால், தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. படம் வெளியாகி பத்தே நாளில் 45 கோடி வசூலை கடந்து 50 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் தான் முதல் இடத்தில் உள்ளதாம்.