Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மிரட்டலான பிரமோஷன்கள்.. பொன்னியின் செல்வன் டீம் இப்ப எங்க இருக்காங்க தெரியுமா?
டெல்லி : நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
கல்கியின் வரலாற்றுப் படைப்பான இந்தப் படத்தை தன்னுடைய கனவு முயற்சியாக இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அஜித்தின் துணிவு ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்… விரைவில் ரிலீஸ் அப்டேட்

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின்மூலம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு நனவாகியுள்ளது. கல்கியின் வசீகரமான எழுத்தை வாசித்த வாசகர்களின் கனவும்தான்.

30ம் தேதி ரிலீஸ்
இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

சென்னையில் துவங்கிய பிரமோஷனல் டூர்
இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரமோஷனல் டூரை சென்னையில் இருந்து துவங்கினர். தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, ஐதராபாத்தி உள்ளிட்ட இடங்களில் இவர்கள் தங்களது சிறப்பான பிரமோஷனை நடத்தி முடித்துள்ளனர்.

டெல்லியில் பிரமோஷன்
தொடர்ந்து மும்பையிலும் படத்தின் பிரமோஷன் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்றைய தினம் டெல்லியில் படத்திற்கான பிரமோஷனை படக்குழு நடத்தவுள்ளது. இதற்காக தற்போது டெல்லியில் அவர்கள் லேண்ட் ஆகியுள்ளனர். இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

உற்சாகத்துடன் டீம்
லைகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி த்ரிஷா உள்ளிட்டவர்களை காண முடிந்தது. படத்திற்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறப்பான வரவேற்பு காரணமாகவோ என்னவோ அவர்கள் அனைவரது முகங்களிலும் உற்சாகத்தை காண முடிந்தது. தொடர்ந்து இன்று மாலை படத்திற்கான பிரமோஷன் நடைபெறவுள்ளது.