Don't Miss!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
விறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் சூட்டிங்...ரிலீஸ் எப்போ தெரியுமா ?
சென்னை : எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், 5 பாகங்களாக வெளி வந்தது. இந்த நாவலை சினிமாவாக எடுக்க வேண்டும் என்பது பல டைரக்டர்களின் பல ஆண்டு கனவு.
இந்த கனவை தற்போது நிஜமாக்கி உள்ளார் டைரக்டர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக எடுப்பதற்கான பணிகளை அவர் எப்போதோ துவங்கி விட்டார். கிட்டதட்ட இது முடியும் நிலையில் உள்ளது என்றே சொல்லலாம்.
மணிரத்தனம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. முதல் பாகத்திற்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிட்டதட்ட படத்தின் பணிகள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று இரண்டாம் பாகத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ம் ஆண்டு மே மாதத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.