Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பொன்னியின் செல்வன் ஷூட்டிங்... ஒரு நாள் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா அசந்துடுவீங்க!
Recommended Video
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் எவ்வளவு செலவாகிறது என்பது தெரிய வந்துள்ளது.
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
பாகுபலி போல இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
ஆண் நண்பரின் மேலே ஏறி அமர்ந்து.. மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும் ஷாலு ஷம்மு.. வைரலாகும் வீடியோ!
ஆதித்த கரிகாலன்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பிரமாண்ட செட்
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் எடுக்கப்பட்டன.
ராமோஜிராவ் பிலிம்சிட்டி
இதில் சுமார் 100 குதிரைகள் பங்கேற்றன. சுமார் 800 க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களும் பங்கேற்றனர். இதையடுத்து ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்துவருகிறது. இங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக, ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு மட்டும்
இதன் படப்பிடிப்பில் நடிகர் ரியாஸ் கான், நடிகை ஷோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் இணைந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு மட்டும் சுமார் ரூ.90 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை செலவாகிறது என்று கூறப்படுகிறது. வேறு எந்த இந்தியப் படத்துக்கும் தினமும் ஒரு கோடிவரை செலவானதில்லை என்கிறார்கள்.
கணக்கு வழக்குகள்
ஏராளமான குதிரைகள் படத்தில் பங்கேற்கின்றன. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றனர். இதனால்தான் இவ்வளவு செலவு என்று கூறப்படுகிறது. கணக்கு வழக்குகளை கண்காணிக்க, தனி டீமே நியமிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த மாதம் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அதன்பிறகு படக்குழு சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிகிறது.