Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை : பொன்னியின் செல்வன் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், விரைவில் ஓய்வுபெற போவதாக தெரிவித்தார்.
Recommended Video
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் படமாக IMAX தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வந்தியத்தேவனை மதிக்காத அந்த இருவர்:'பொன்னி நதி'மேக்கிங் வீடியோவில் கார்த்தி சொன்ன தகவல்
பொன்னியின் செல்வன்
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்கள் உள்ளன.
முன்னணி நடிகர்கள்
இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பொன்னி நதி
தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
என்ன இப்படி சொல்லிட்டாரு
இந்நிலையில், தற்போது 2-வது பாடலாக சோழா சோழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விக்ரம், எனக்கும் மணிரத்னம் சாருக்கும் இடையே நல்ல உறவும், நல்ல புரிதலும் இருக்கிறது. மணிரத்னத்தின் பல நாள் கனவு நிஜமாகியிருக்கிறது. மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரின் படங்களில் நடித்த பின்னர் சினிமா துறையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறேன். இந்தப்படத்தில் இப்படியான ஒரு கதாபாத்திரம் கிடைத்தற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று பேசினார். விக்ரம் விரைவில் ஓய்வுபெற போகிறேன் என பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.