Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மீண்டும் உக்கிரமாகும் கொரோனா... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து!
சென்னை: மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
சட்டை பட்டனை கழட்டி விட்டு..முன்னழகு தெரிய முரட்டு போஸ்..ரேஷ்மாவின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் !
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு நிறுத்தம்
இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. படத்தின் சில காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
படக்குழு திட்டம்
அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தம்
ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை உக்கிரமடைந்துள்ளதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துள்ளது.
Recommended Video
ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்ய லட்சுமி வீட்டில் தனிமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.