Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் உக்கிரமாகும் கொரோனா... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து!
சென்னை: மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்படுகிறது.
சட்டை பட்டனை கழட்டி விட்டு..முன்னழகு தெரிய முரட்டு போஸ்..ரேஷ்மாவின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் !
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு நிறுத்தம்
இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. படத்தின் சில காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
படக்குழு திட்டம்
அதன்பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.
மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தம்
ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை உக்கிரமடைந்துள்ளதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துள்ளது.
Recommended Video
ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்ய லட்சுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்ய லட்சுமி வீட்டில் தனிமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.