Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மார்ச் 5ஆம் தேதியுடன் முடிகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு? தீபாவளிக்கு வருதுங்றாங்க!
சென்னை: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மார்ச் 5ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'.
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
காலை 8 முதல் இரவு 11 வரை
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு இரவு 11 மணிக்குதான் நிறைவடைவதாக கூறப்படுகிறது.
வியந்துப்போன மணிரத்னம்
படப்பிடிப்பு தளத்தில் கார்த்தியின் டெடிகேஷனையும் நடிப்பையும் பார்த்து இயக்குநர் மணிரத்னம் ஆச்சரியப்பட்டதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் டபுள் ஆக்ஷன்
இதனிடையே இந்தப் படத்தில் விக்ரம் சோழ மன்னர் ஆதித்ய கரிகாலனாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு ரோல் சரத்குமாருக்கு ஜோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 5ஆம் தேதியுடன்
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளிக்கு ரிலீஸ்?
இந்தப் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. பொன்னியின் செல்வன் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.