Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பொன்னியின் செல்வன்..சிம்பு நடித்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா?..ஜெயம் ரவி விளக்கம்
பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பல விஷயங்களை மனம் திறந்து படக்குழுவினர் பேசினர்.
பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தால் நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னேனா என்பது பற்றி ஜெயம் ரவி விளக்கமளித்தார்.
தன்னிடம் இதுகுறித்து சிலம்பரசன் பேசியதாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார்.
இழுபறியில் பொன்னியின் செல்வன் தமிழக விநியோக உரிமை..யாருக்கு வாய்ப்பு? ரிலீசுக்கு 2 வாரமே உள்ளது
எதிர்ப்பார்ப்பில் வெளி வரும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படம் பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் செப்.30 அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கூடுதல் பலம். இன்னொருபுறம் இது மணிரத்னம் படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த படக்குழு
பொன்னியின் செல்வன் வரும் செப் 30 அன்று வெளியாக உள்ளது. செப்.29 தனுஷின் நானே வருவேன் வெளியாகிறது. அதனால் போட்டி இருக்கும் என்கிற நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. சரியானபடி பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் செல்லவில்லை என்று கூறப்ப்டுகிறது. இந்நிலையில் ஒன்று பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சிம்புவுடன் மோதலா? பிரச்சினையை தொட்ட ஜெயம் ரவி
அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு மணிரத்னம், கார்த்தி, பார்த்திபன், ஜெயம்ரவி உள்ளிட்டோர் பதிலளித்தனர். பொன்னியின் செல்வன் படபிடிப்பு ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு பிரச்சினை சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலானது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்ததாகவும், சிம்பு நடிப்பதாக இருந்தால் தான் இந்த படத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளியானது.
நான் சொன்னால் கேட்கிற ஆளா மணிரத்னம்-ஜெயம் ரவி
இதுகுறித்து அப்போது ஜெயம்ரவியோ படக்குழுவினரோ பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்தப்பிரச்சினையை இன்று தீர்த்துவைத்தார் ஜெயம் ரவி. அவர் பேசும்போது "நான் சிம்பு நடித்தால் நடிக்க மாட்டேன் விலகி கொள்கிறேன் என்று சொன்னதாக சொல்கிறார்கள், நினைச்சா சிரிப்புத்தான் வருது, நான் சொன்னால் கேட்கிற ஆளா மணி ரத்னம் சார். நான் சொன்னால் கேட்கும் குழுவா இது. எனக்கும் சிம்புவுக்கும் அப்படி என்ன பிரச்சினை இருக்கு" என்று கேட்டார்.
சிம்புவின் பெருந்தன்மை
இதைவிட ஒரு காமெடி சொல்கிறேன் கேளுங்கள், இந்தப்பிரச்சினை பெருசா இருக்கும்போது சிம்பு எனக்கு போன் செய்தார், "மச்சி இந்த மாதிரி சொல்கிறார்கள் என்று எதுவும் ஃபீல் பண்ணாத கண்டுக்காதே" என்று சொன்னார். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினையை ஜெயம்ரவி இன்று முடித்து வைத்துள்ளார். ஜெயம்ரவியும், சிம்புவும் பேசியதையும் சிம்புவின் பெருந்தன்மை பற்றியும் அவர் மூலம் தெரியவந்துள்ளது.