Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெளிநாட்டில் 40 நாள் ஷூட்டிங் திட்டம்.. சார்டட் பிளைட் அனுமதிக்கு காத்திருக்கும் மணிரத்னம் டீம்!
சென்னை: பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்காக, சார்ட்டட் பிளைட் அனுமதிக்கு மணிரத்னம் டீம் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
கொரோனா காரணமாக தடைபட்டிருக்கிறது 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஷூட்டிங். இந்த படம் இரண்டு பாகமாக எடுக்கப்படுகிறது.
இதற்கு முதல் பாகத்தை எடுத்து முடித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் மொத்த திட்டங்களையும் சிதைத்து விட்டது.
லாஸ்லியா புதிய போட்டோ ஷுட் கேப்ஷன பாத்தீங்களா.. கவினோட காதல் பத்தியா சொல்றாங்க?
விக்ரம், ஜெயம் ரவி
கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலான 'பொன்னியின் செல்வனை' பலர் படமாக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து மணிரத்னம் இப்போது இயக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.
ஐஸ்வர்யா ராய்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார்.
லாக்டவுன் காரணமாக
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியிலும் புதுச்சேரியிலும் படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பட்டப்பிடிப்பு புனேவில் தொடங்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில்தான் கொரோனா கபளீகரம் செய்தது.
வெளிநாடுகளில் ஷூட்டிங்
அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் இதன் ஷூட்டிங் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது லொகேஷனை மாற்றியுள்ளனர். இதுபற்றி படக்குழு கூறும்போது, 'சில இந்தி படங்களின் ஷூட்டிங்கை வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர். இதற்காக, சார்டட் பிளைட்டில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
சார்டட் பிளைட்
அதே போல, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இலங்கையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. மொத்தம் 40 நாட்கள் அங்கு நடத்த திட்டம். இதற்காக சார்டட் பிளைட்டுக்கு அனுமதி கேட்டு விமானத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அது கிடைத்ததும் நடிகர், நடிகைகளிடம் கால்ஷீட் கேட்கப்படும். பிறகு அங்கு செல்வார்கள்' என்று தெரிவித்தனர்.