Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...! - பொன்ராஜ் புகழாரம்
சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் இன்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினிக்கு அப்துல் கலாம் மற்றும் தான் எழுதிய புத்தகங்களைப் பரிசாகத் தந்தார் பொன்ராஜ்.
இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழமாக ரஜினி விவாதித்ததாக பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் அவர்கள் மிகச் சிறந்த மனிதர், மனிதாபிமானி, எளிமையானவர் என்பது மட்டுமல்ல, உண்மையில் ஒரு தொலைநோக்குப் பார்வை மிக்கவர் என்றும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் மறைவின்போது, முதலில் அவருக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி, அவரைப் போன்ற மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பெருமை என்று தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
இந்த சந்திப்பின்போது ரஜினி, பொன்ராஜின் நண்பரும் உடனிருந்தார்.