Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூ வாடலாம்..பாசம் மாறாது..நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து உருகிய ரவீந்தர்!
சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
செப்டம்பர் 1ந் தேதி நடந்து முடிந்த இவர்களுடைய திருமணம் 28 நாட்களை கடந்த பின்பும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் இவற்றை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருகி உருகி காதலை பகிர்ந்து வருகின்றனர்.
நடிப்புக்கு முழுக்குப் போடும் நடிகை மகாலட்சுமி.. ரவீந்தர்தான் வற்புறுத்தினாரா?
காதல் திருமணம்
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களின் திருமண போட்டோவை ரவீந்திரன் வெளியிட்டது அது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது. அந்த வாரம் முழுவதும் இருவரின் திருமணம் குறித்து அனைவரும் பேசி பேசி களைத்துப் போனார்கள்.
பரபரப்பான பேட்டி
இதையடுத்து, இவர்கள் இருவரும் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, இன்னும் பிரபலமானார்கள். நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம் ஆனால், மகாலட்சுமி, தலை தீபாவளிக்காக இந்த மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனால், தற்போது திருமணம் நடந்துள்ளது இது அவசரப்பட்டு நடந்த திருமணம் இல்லை.
வந்தாள் மகாலட்சுமி
இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் புது வித நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில், புதுமண தம்பதிகளான மகாலட்சுமியும் ரவீந்திரனும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில், அவர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.
ஐ லவ் யூ மகாலட்சுமி
இரண்டு பேரில் அதிகம் ஐ லவ் யூ சொன்னது யார் என்ற கேள்விக்கு, மகாலட்சுமி அவர் ஐ லவ் யூ சொல்லவே மாட்டாரு நான் தான் சொல்லுவேன் என்றார். இதையடுத்து, ரவீந்திரன் இதுவரை மகாலட்சுமி ஷங்கர் உன்னை பார்த்துக்கொண்டார் இனி மகாலட்சுமி ரவீந்திரன் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் ஐ லவ் யூ என்றார்.
பூ வாடலாம் பாசம் மாறாது
இதையடுத்து பரிசு கொடுக்கும் டாஸ்க்கில் மல்லிப்பூவை கையில் கொடுக்க, அதை பார்த்த ரவீந்திரன் இந்த பூ வாடலாம் உன் மீது வைத்திருக்கும் பாசம் மாறாது என்று கூறியுள்ளார். மேலும், கனமான கொலுசை பரிசாக கொடுக்க புவி ஈர்ப்பு விசைக்கு தெரியாது என் பாதம் எவ்வளவு கனத்தை தாங்கும் என்று கவிதை கவிதையா பேசி உள்ளார். ப்ரோமோவே இப்படி என்றால் மெயின் பிக்ஸர் சும்மா அதிரும் போல என 90ஸ் கிட்டு இளசுகள் ஏக்கத்துடன் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ந் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!