Don't Miss!
- Finance RCB கப் அடிக்காவிட்டாலும், இந்த விஷயத்தில் கில்லி.. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் செய்த ராயல் சம்பவம்!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
நான் புது பூஜா! பெங்களூரில் நடந்த விபத்தில் சிக்கி தேறிய பின், மறுபடியும் நடிக்க வந்து விட்டார்பூஜா.அது ஒரு கெட்ட கனவு மாதிரி என்கிறார் விபத்தில் தப்பி புத்துயிர் பெற்று வந்துள்ளபூஜா. கடந்த 7ம் தேதி சென்னைக்கு வருவதற்காக பெங்களூரில் உள்ள தனதுவீட்டிலிருந்து விமான நிலையத்திற்குக் கிளம்பினார் பூஜா.சிக்னலில் அவரது கார் நின்றபோது வேகமாகவ வந்த லாரியொன்று பூஜாவின் காரைஇடித்துத் தள்ள கார் அப்பளமானது. படுகாயமடைந்தார் பூஜா.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பூஜா சமீபத்தில் வீடுதிரும்பினார். இதையடுத்து சென்னைக்குப் பறந்து வந்த பூஜா, ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். என்னாச்சுப்பா என்று பரிவோடு பூஜாவை அமர்த்தி வைத்து கேட்டபோது, அய்யோ,அதை நினைச்சா இப்போது கூட பயமாக இருக்கு. கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தது.வேகமாக வந்த லாரி ஒன்று என் கார் மீது மோத, அவ்வளவுதான், கண் முழுச்சுப்பார்த்தபோது சினிமா பாணியில் நான் மருத்துவமனையில் இருந்தேன். என்னைச்சுற்றி ஏகப்பட்ட பேர்.இடுப்புல சரியான அடி. கட்டுப் போட்டிருந்தார்கள். நிறைய மருந்துகள்கொடுத்தார்கள். ஒரு வாரம் எழுந்திருக்கவே முடியாமல் பெட்டில் போட்டுவிட்டார்கள். ரொம்பவே பயந்துட்டேன். ஒரு வழியாக தேறி, மறுபிறவி எடுத்ததுபோல மீண்டும் வீட்டுக்குத் திரும்பினேன்.மருத்துவமனையில் இருந்தபோது ஏகப்பட்ட மருந்துகள் சாப்பிட்டதால் உடம்பில்சூடு அதிகமாக மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. நான் கதறி அழுதுவிட்டேன். டாக்டர்கள் சமாதானப்படுத்தி மருந்துகள் அதிகம் சாப்பிட்டதால்தான் ரத்தம் வருகிறதுஎன்று என்னை ஆசுவாசப்படுத்தினார்கள்.எனது எதிரிக்குக் கூட இப்படி ஆகக் கூடாதுப்பா. நல்ல வேளையாக தேறி வரும்அளவுக்கு காயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், அய்யோ, நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்று கண்ணில் இன்னும் தங்கியுள்ள பயத்துடன் கூறி முடித்தார் பூஜா.ஆக்சிடன்ட் ஆகி மருத்துவமனையில் சேர்ந்து அவஸ்தைப்பட்ட காயத்தில் இருக்கும்பூஜாவுக்கு, அவரும், மாதவனும் சேர்ந்து நடித்த தம்பி படம் நல்லபடியாக ஓடிஓரளவுக்கு ஹிட் ஆகியிருப்பது பெரும் ஆறுதலாக இருக்கிறதாம்.நான் மருத்துவமனையில் பட்ட அவஸ்தையையெல்லாம் மறக்கும்படியாக தம்பிநன்றாக ஓடுவது ஆறுதலாக இருக்கிறது என்று சந்தோஷமாக கூறினார் பூஜா.தம்பி கெடக்கட்டும்.. உடம்பப் பார்த்துக்குங்க பூஜ்ஜி..!
பெங்களூரில் நடந்த விபத்தில் சிக்கி தேறிய பின், மறுபடியும் நடிக்க வந்து விட்டார்பூஜா.
அது ஒரு கெட்ட கனவு மாதிரி என்கிறார் விபத்தில் தப்பி புத்துயிர் பெற்று வந்துள்ளபூஜா. கடந்த 7ம் தேதி சென்னைக்கு வருவதற்காக பெங்களூரில் உள்ள தனதுவீட்டிலிருந்து விமான நிலையத்திற்குக் கிளம்பினார் பூஜா.
சிக்னலில் அவரது கார் நின்றபோது வேகமாகவ வந்த லாரியொன்று பூஜாவின் காரைஇடித்துத் தள்ள கார் அப்பளமானது. படுகாயமடைந்தார் பூஜா.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பூஜா சமீபத்தில் வீடுதிரும்பினார். இதையடுத்து சென்னைக்குப் பறந்து வந்த பூஜா, ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.
என்னாச்சுப்பா என்று பரிவோடு பூஜாவை அமர்த்தி வைத்து கேட்டபோது, அய்யோ,அதை நினைச்சா இப்போது கூட பயமாக இருக்கு. கார் சிக்னலில் நின்றுகொண்டிருந்தது.
வேகமாக வந்த லாரி ஒன்று என் கார் மீது மோத, அவ்வளவுதான், கண் முழுச்சுப்பார்த்தபோது சினிமா பாணியில் நான் மருத்துவமனையில் இருந்தேன். என்னைச்சுற்றி ஏகப்பட்ட பேர்.
இடுப்புல சரியான அடி. கட்டுப் போட்டிருந்தார்கள். நிறைய மருந்துகள்கொடுத்தார்கள். ஒரு வாரம் எழுந்திருக்கவே முடியாமல் பெட்டில் போட்டுவிட்டார்கள். ரொம்பவே பயந்துட்டேன். ஒரு வழியாக தேறி, மறுபிறவி எடுத்ததுபோல மீண்டும் வீட்டுக்குத் திரும்பினேன்.
மருத்துவமனையில் இருந்தபோது ஏகப்பட்ட மருந்துகள் சாப்பிட்டதால் உடம்பில்சூடு அதிகமாக மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. நான் கதறி அழுதுவிட்டேன்.
டாக்டர்கள் சமாதானப்படுத்தி மருந்துகள் அதிகம் சாப்பிட்டதால்தான் ரத்தம் வருகிறதுஎன்று என்னை ஆசுவாசப்படுத்தினார்கள்.
எனது எதிரிக்குக் கூட இப்படி ஆகக் கூடாதுப்பா. நல்ல வேளையாக தேறி வரும்அளவுக்கு காயம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், அய்யோ, நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்று கண்ணில் இன்னும் தங்கியுள்ள பயத்துடன் கூறி முடித்தார் பூஜா.
ஆக்சிடன்ட் ஆகி மருத்துவமனையில் சேர்ந்து அவஸ்தைப்பட்ட காயத்தில் இருக்கும்பூஜாவுக்கு, அவரும், மாதவனும் சேர்ந்து நடித்த தம்பி படம் நல்லபடியாக ஓடிஓரளவுக்கு ஹிட் ஆகியிருப்பது பெரும் ஆறுதலாக இருக்கிறதாம்.
நான் மருத்துவமனையில் பட்ட அவஸ்தையையெல்லாம் மறக்கும்படியாக தம்பிநன்றாக ஓடுவது ஆறுதலாக இருக்கிறது என்று சந்தோஷமாக கூறினார் பூஜா.
தம்பி கெடக்கட்டும்.. உடம்பப் பார்த்துக்குங்க பூஜ்ஜி..!