மீண்டும் இணையும் பூலோகம் படத்தின் கூட்டணி! கூடிய விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி.
தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து சரிவர அதனை நடித்து ரசிகர்களை ஈர்ப்பவர் ஜெயம் ரவி.
தற்போது ஜெயம் ரவி "பூலோகம்" படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள படத்தை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலவையான விமர்சனம்
இந்த ஆண்டில் இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் நடிப்பில் பொங்கலன்று நேரடியாக ஹாட் ஸ்டாரில் பூமி திரைப்படம் வெளியானது. விமர்சகர்கள் மத்தியில் படம் பெரிதாக பேசப்படவில்லை அது போலவே ரசிகர்கள் மத்தியிலும் படம் சோபிக்க தவறியது.

நம்பிக்கை அளிக்கிறது
பூமி சோபிக்காமல் போன நிலையில் ஜெயம் ரவியின் வரவிருக்கும் படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என ஜெயம் ரவியின் லைன் அப் நம்பிக்கை அளிக்கிறது.
Recommended Video

இயக்குனர் கல்யாண்
2015-ம் ஆண்டு கல்யாண் இயக்கத்தில் வெளியான "பூலோகம்" படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, பொன்வண்ணன், நாதன் ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வட சென்னை பகுதியில் பரம்பரை , பரம்பரையாக கலக்கிய பாக்ஸர்கள் பற்றியது பூலோகம் திரைப்படம். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

பூலோகம் கூட்டணி
இந்நிலையில் கல்யாண் - ஜெயம் ரவி கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக முன்னரே அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











