Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பூனம் பஜ்வா மற்றும் நட்டி நடிக்கும் புதிய படம்... "குருமூர்த்தி" என்ற பெயரில் உருவாகியிருக்கிறது
சென்னை: பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி .இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.
ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது, அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்சனை வருகிறது.இதைஎப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார் வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் விதமாக-இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மீண்டும் தலைதூக்கும் ஜெய்பீம் சர்ச்சை... சூர்யா படத்தை வெளியிட பாமக எதிர்ப்பு
படத்தின் படபிடிப்பு
இந்தப்படம் காமெடி , சென்டிமென்ட் , ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கான அனைத்துக் கட்ட படபிடிப்புகளும். நீலகிரி 'மாவட்டம் பாண்டிச்சேரி, கேரளாவை சேர்ந்த புத்தேரி போன்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளிலும் நடந்து முடிவடைந்திருக்கிறது. ஜனவரியில் துவங்கிய இந்தப் படத்தின் படபிடிப்பு ஒரேஷெட்யூலில் அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு முடிவடைந்திருக்கிறது.
ஒட்டு மொத்த குழுவையும்
வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாட்டோடு இந்தப்படத்திறகான இறுதி கட்ட (போஸ்ட் புரொடக்ஷன் ) வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. இதில் நடராஜ்(எ) நட்டி, பூனம் பஜ்வா, ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் .அஸ்மிதா. சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவை தேவராஜ் கவனித்திருக்கிறார். இசையை சத்ய தேவ் மற்றும் உதய சங்கர், அமைத்திருக்கிறார்கள். பாடல்களை மகுவி, வெள்ளத்துரை, கீர்த்தி வாசன், எழுதி உள்ளனர் . எடிட்டிங் S.N. பாசில், கலை தாகூர், நடனம் ராதிகா, ஸ்டண்ட் பயர் கார்த்திக், ஸ்டில்ஸ் - மதன், மக்கள் தொடர்பு-பெருதுளசி பழனிவேல், வசனம்- கீர்த்தி வாசன்,தயாரிப்பு சிவசலபதி மற்றும் சாய் சரவணன் கவனிக்க இந்த ஒட்டு மொத்த குழுவையும் கேப்டனாக நின்று கதை, திரைக்கதை, டைரக்ஷன் என்று கே.பி.தனசேகர் இந்த படத்தை இயக்கி உள்ளார் .
போட்டோ ஷூட் செய்து
பூனம் பாஜ்வா வித்தியாசமான திரைப்படங்கள் செலக்ட் செய்து நடித்து வருகிறார். சமீப காலமாக சோஷியல் மீடியாவில் இவரது புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக போட்டோ ஷூட் செய்து இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார். கொஞ்சம் கூடுதலான கவர்ச்சியை கவனம் காட்டி தனது சினிமா வெற்றியை தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளும் செய்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று பெரிதும் நம்புகிறார்.
காதல் மற்றும் ரொமான்ஸ்
நட்டி நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் "சதுரங்க வேட்டையில்" ஆரம்பித்த அவரது பயணம் பல இயக்குனர்களுடன் தொடர்ந்து மாறுபட்ட பல கதாபாத்திரங்கள் செய்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். "குருமூர்த்தி" என்கின்ற இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய பல காட்சிகள் தைரியமாக நடித்திருப்பதாக அந்தப்படத்தில் குழுவினரும் சொல்லி வருகின்றனர். உயரத்திற்கு ஏற்றார்போல் சண்டைக்காட்சிகளில் மிகவும் மெனக்கெட்டு குருமூர்த்தி திரைப்படத்தில் அசத்தியுள்ளார் என்றும் காதல், ரொமான்ஸ் காட்சிகள் , சர்ச்சையான வசனங்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் மிகவும் அற்புதமாக கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு நட்டி நடித்துள்ளார் என்று இயக்குனர் மிகவும் பாராட்டி உள்ளார். விரைவில் இந்த படம் வெளிவந்து மக்கள் மனதை கவரும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.