Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவாவை விட்டு போகக்கூடாது, ஆமா.. ஆபாசப்பட விவகாரம்.. பூனம் பாண்டேவுக்கு ஜாமீன்!
கோவா: கோவா போலீசாரால் கைது செய்யப்பட்ட பூனம் பாண்டேவுக்கும் அவர் காதல் கணவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
Recommended Video
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர்.
சர்ச்சை நடிகையான இவர், அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார்.
தேனிலவு கோவா
இவர் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனை பலர் கண்டித்தும் கண்டுகொள்வதில்லை இவர். இவரும் சாம் பாம்பேவை என்பவரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர்.
மீண்டும் சேர்ந்தனர்
கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசில் புகார் அளித்தார் பூனம். பின்னர் இருவரும் சமரசமாகி மீண்டும் இணைந்தனர். இந் நிலையில் பூனம் பாண்டே தெற்கு கோவாவில் கனாகோனா (Canacona) பகுதியில் உள்ள அணையின் அருகில் நின்று ஆடைகளை களைந்து நிர்வாண போஸ் கொடுத்து வீடியோ எடுத்தார்.
ஆபாச படம்
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
வியாழன் கைது
கோவா முன்னேற்ற கழக மகளிர் அணி மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனால் பூனம் பாண்டே கைதாகலாம் என பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரும் அவர் கணவர் சாம் பாம்பேவும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
வெளியேறக் கூடாது
இந்நிலையில், அவர்களுக்கு கனாகோனா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். இருவரும் 6 நாட்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவின்றி கோவாவைவிட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.