Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அய்யோ பாவம், அடுத்தடுத்தா?: இது என்னய்யா விஜய்க்கு வந்த சோதனை
Recommended Video
சென்னை: பாவம் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து கதை திருட்டு பிரச்சனையில் சிக்குகின்றன.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் சர்கார் படத்தின் கதை தன்னுடயது என்று கூறி வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் விசாரித்து வருணுக்கு ஆதரவு தெரிவித்தது.
லொள் லொள்.. உர் உர்.. ராம நாராயணன் ஸ்டைலுக்கு திரும்பும் தமிழ் சினிமா!
சர்கார்
சர்கார் பட டைட்டில் கார்டில் கதை, நன்றி வருண் என்று குறிப்பிட்டார் முருகதாஸ். டைட்டில் கார்டில் வருணின் பெயரை போட்ட போதிலும் கதை தன்னுடையது என்று கடைசி வரை நிலையாய் நின்றார் முருகதாஸ். சர்கார் எனது செங்கோல் படத்தின் கதை தான். விஜய்க்கு என் செங்கோலை பரிசளிக்கிறேன் என்றார் வருண்.
கதை திருட்டு
சர்கார் கதை பிரச்சனை ஏற்பட்டபோது இது என்னடா விஜய் அண்ணாவுக்கு வந்த சோதனை, பட ரிலீஸுக்கு முன்பு இப்படி கதை திருட்டு பிரச்சனை வந்துவிட்டதே என்று ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளது.
தளபதி 63
விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து கதை திருட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளன. முருகதாஸாவது கதை என்னுடையது தான் என்று கூறி ஆரம்பத்தில் இருந்து மல்லுக்கட்டினார். ஆனால் தளபதி 63 விவகாரத்தில் அட்லி தரப்பு குறும்பட இயக்குநர் செல்வாவிடம் சமரசம் பேசியுள்ளது. கதை திருட்டை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அட்லியின் மேனேஜரும், ஏஜிஎஸ் நிறுவனமும் கூறியதாக செல்வா தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பையர்
அட்லி பிற கதைகளில் இருந்து இன்ஸ்பையர் ஆகி படம் எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு குறும்பட இயக்குநரின் கதையை சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் அந்த கதையை தெரிவித்திருந்த நிலையில் அட்லி அதை சுட்டுவிட்டதாக கூறுகிறார் செல்வா.
படம்
கதை திருட்டு விவகாரத்தில் பாவம் விஜய் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஏனோ அவர் படங்களுக்கே இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அவர் கதை பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டது ஒரு குத்தமா?. இனி கதை கேட்கும்போது அது சுட்ட கதையா, சுடாத கதையா என்பதை கண்டுபிடிக்க விஜய் தனிக்குழு அமைக்கணும் போலயே.
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!