Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொழிலதிபருடன் விபச்சாரம்... பிரபல நடிகை யமுனா கைது... 14 நாள் சிறையில் அடைப்பு!
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நடிகை யமுனாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான ரவிச்சந்திரன் நடித்த சின்னா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யமுனா.
பின்னர் மாவனிகே தக்க அளியா, ஹெண்டத்தியரே உஷார் படங்களில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்து இருந்தார்.
மேலும், மோடத மரேயல்லி என்ற படத்தில் நடித்தபோது யமுனா என்ற தனது பெயரை சவும்யா என்று மாற்றிக் கொண்டார். நடிகர் சிவராஜ்குமாருடனும் யமுனா நடித்துள்ளார். நேற்று திரைக்கு வந்த கண்டீரவா என்ற படத்தில், நடிகை யமுனா குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தமிழ் படங்களிலும் துணை நடிகையாகவும் யமுனா நடித்திருக்கிறார். தெலுங்கில் எர்றமந்தாரம், மவுன போராட்டம், மாமகாடு உள்பட பல படங்களிலும், தற்போது சீரியல்களிலும் யமுனா நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூர் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள ஐடிசி 7 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது நடிகை யமுனா, தகவல் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வரும் வேணுகோபால் என்பவருடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பிடிபட்டார். இதையடுத்து, நடிகை யமுனா, வேணுகோபால், இதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் சுரக்ஷித் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஓட்டலில் தங்க, அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட உள்ளதாக காரணம் தெரிவித்துிருந்தனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகையும் தொழிலதிபரும். ஓட்டலுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.26 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு 3 பேரும் நேற்று 1-வது பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடிகை யமுனாவையும், வேணுகோபாலையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி வெங்கடேஷ் குலகி உத்தரவிட்டார். மேலும் விபசார வழக்கு தொடர்பாக புரோக்கர் சுரக்ஷித்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டதன் பெயரிலும், அவரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் பிதாரி கூறுகையில், "பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்களில் உயர்மட்ட அளவில் விபசாரம் நடைபெறுவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் ஈடுபடுபவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். அந்த கும்பலை பிடிக்க அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் நடிகை உள்பட 3 பேரும், மற்றொரு சோதனையில் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விபசார புரோக்கர்கள் இன்டர்நெட், நவீன முறையின் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிப்போம்," என்றார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?