Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்
Recommended Video
சென்னை: பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்.
1929ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். சென்னை தி. நகரில் வசித்து வந்த முக்தா சீனிவாசன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
முதலாளி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முக்தா சீனிவாசன். எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில் 1957ம் ஆண்டு வெளியான முதலாளி படம் தேசிய விருது பெற்றது. சுமார் 60 ஆண்டுகள் திரையுலகில் இருந்த அவர் பாஞ்சாலி, நினைவில் நின்றவள், சூர்யகாந்தி, பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் எடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த நாயகன் படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். நாகேஷை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அவர் அரசியலிலும் இருந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த சீனிவாசன் பின்னர் ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் சேர்நதார். பொதுச் செயலாளராக இருந்த அவர் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்தார்.
தி.நகரில் உள்ள பாஜக தலைமைச் செயலக கட்டிடம் ஒரு காலத்தில் சீனிவாசனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.