Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
வரதட்சணை கொடுமை.. கள்ளத் தொடர்பு.. டார்ச்சர்.. மனைவி தந்த புகார்.. பிரபல கானா பாடகர் மகன் கைது!
பிரபல கானா பாடகர் பழனியின் மகன், வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் பிரபல கானா பாடகரின் மகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் கானா பாடகர் பழனி. இவர் பல தமிழ் படங்களில் கானா பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய மகன் தரணி.
34 வயதாகும் தரணி, 22 வயதாகும் விஜய பானு எனும் பெண்ணை கடந்த ஆறு வருடமாக காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு தான் தரணியின் உண்மையான முகம் பானுவிற்கு தெரியவந்திருக்கிறது.
வேலைக்கு போகாமல் வெட்டியாய் ஊர் சுற்றி வந்த தரணி, திருமணமான சில தினங்களிலேயே பானுவின் 20 சவரன் தங்க நகைகளை அடகு வைத்து செலவு செய்துவிட்டார். அத்துடன் நிறுத்தாமல், பானுவை துன்புறுத்தி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய் இன்னும் பணம் வாங்கி வரும்படி டார்ச்சர் செய்திருக்கிறார்.
மேலும் தரணி, வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவரது செல்போனில் இருந்துள்ளது. அது பற்றி பானு கேட்டதால் ஆத்திரமடைந்த தரணி, அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியிருக்கிறார்.
இதையடுத்து, தரணி மற்றும் அவரது தாய் மீது பானு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, தரணிக்கு அவருடன் 10 வயது மூத்த பெண் நித்யா என்பவருடன் ஏற்கனவே கள்ளத் தொடர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. நித்யா ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இருந்த நிலையில், தரணி மூலம் மேலும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வரதட்சணை கொடுமை,மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தரணி, அவரது தாய் ராஜேஸ்வரி, சகோதரி பரணி ஆகியோரை கைது செய்தனர். பாடகர் பழனி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.