Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஹிஜாப் விவகாரம்… நீதிபதி குறித்து மோசமான கருத்து… பிரபல நடிகர் கைது !
பெங்களுர் : ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்த பிரபல கன்னட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களுரில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் மற்றும் காஜி ஜெய்புன்னிசா மொகிதீன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக ஆர்வலரான கன்னட நடிகர் சேத்தன் குமார் ஹிஜாப் விவகாரத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த 16-ந் தேதி தனது ட்விட்டரில், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் கூறியது பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டு இருந்தார். நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது தற்போது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி சேத்தன்குமாருக்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் அனுசேத், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பற்றி சேத்தன் குமார் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இதை அறிந்த போலீசார், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். பகை மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேத்தனின் மனைவி மேகா ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரிவில்லை. மேலும் அவரின் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது கைது செய்யப்பட்டது போல கடத்தப்பட்டது போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சேத்தன் குமார் கைது தொடர்பாக விளக்கம் கேட்டு சேஷாத்ரிபுரம் காவல் நிலையம் மற்றும் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.