Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
மும்பை: பிரபல டிவி சீரியல் நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மனோஜ் கோயல். அவரின் மனைவி நீலிமா(40). இல்லத்தரசி. அவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். சனிக்கிழமை மனோஜ் வேலைக்கு சென்றுவிட்டார், மகள் டியூஷனுக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்துள்ளார் நீலிமா.
தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலிமா படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
மகள்
டியூஷனுக்கு சென்ற மகள் வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டியிருந்ததை பார்த்து தட்டியும் நீலிமா திறக்கவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ்
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நீலிமா பிணமாகத் தொங்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரணம்
நீலிமாவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது மனநலம் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மோசமாவதால் இந்த முடிவு எடுப்பதாக நீலிமா கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.