Don't Miss!
- Finance Vi புதிய OTT சேவை.. வெறும் 200 ரூபாய், அடேங்கப்பா.. இது ஓன்னு போதுமே..!!
- Technology மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- News டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ஜக்கி வாசுதேவ்.. டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி!
- Automobiles ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
- Sports IPL - பெங்களூரில் விராட் கோலி ரசிகருக்கு அடி, உதை! இது எல்லாம் அராஜகம்.. வீடியோ
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
அடுத்தடுத்து இரண்டு மரணம்: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
Recommended Video
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனர் ஜெயா உடல்நலக்குறைவால் காலமானார்.
எம்.ஏ. படித்த பிறகு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் ஜெயா. தெலுங்கு நாளிதழான ஆந்திரா ஜோதியில் எழுதி வந்த அவர் பிரபல சினிமா பத்திரிகையாளரும், பி.ஆர்.ஓ.வுமான பி.ஏ. ராஜுவை திருமணம் செய்தார்.
2003ம் ஆண்டு ஜெயா சந்திகாடு என்ற படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். பிரேமிகுலு, லவ்லி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெயா இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.20 மணிக்கு காலமானார். அவர் இறந்த செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகை காம்னா ஜெத்மலானியை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயா. தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த பெண் இயக்குனர்களில் ஜெயாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
29ம் தேதி நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, 30ம் தேதி ஜெயா என்று அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்துள்ளதால் தெலுங்கு திரையுலகம் கவலையில் உள்ளது.