Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடுத்தடுத்து இரண்டு மரணம்: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
Recommended Video
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனர் ஜெயா உடல்நலக்குறைவால் காலமானார்.
எம்.ஏ. படித்த பிறகு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் ஜெயா. தெலுங்கு நாளிதழான ஆந்திரா ஜோதியில் எழுதி வந்த அவர் பிரபல சினிமா பத்திரிகையாளரும், பி.ஆர்.ஓ.வுமான பி.ஏ. ராஜுவை திருமணம் செய்தார்.
2003ம் ஆண்டு ஜெயா சந்திகாடு என்ற படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். பிரேமிகுலு, லவ்லி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெயா இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.20 மணிக்கு காலமானார். அவர் இறந்த செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகை காம்னா ஜெத்மலானியை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயா. தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த பெண் இயக்குனர்களில் ஜெயாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
29ம் தேதி நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, 30ம் தேதி ஜெயா என்று அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்துள்ளதால் தெலுங்கு திரையுலகம் கவலையில் உள்ளது.