Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உசிலம்பட்டியை மையப்படுத்தி எடுக்கப்படும் 'போர் குதிரை'!
உசிலம்பட்டி... மதுரை மாவட்டத்தின் சிறப்பு மிக்க பகுதி. மதுரை மீது அபார பாசம் கொண்ட மக்கள் வாழும் பகுதி.
இந்த ஊரை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது. படத்துக்கு தலைப்பு போர்க்குதிரை.
மண்ணின் மணம் சார்ந்த படங்களுக்கு என்றுமே ஒரு அபரிதமான வரவேற்பு உத்திரவாதம் என்ற நம்பிக்கையுடன் மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்னும் புதிய பட நிறுவனம் 'போர் குதிரையை' உருவாக்குகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரவீண் பேசுகையில், 'மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியின் கலாசாரத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதை இது.
இந்த மண்ணின் மணத்துக்கும், குணத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. என்னுடைய கதை அந்த மண்ணின் மைந்தர்களின் பழக்கங்களையும் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும். இவர்களுக்கென இருக்கும் ஒரு உத்வேகமான போர்குணமே 'போர் குதிரை' படத்துக்கு அடித்தளம்,' என்றார்.
இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது இந்த போர்க் குதிரை.