Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விளம்பரத்தை தொடர்ந்து மலையாள படத்தில் இருந்தும் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்
திருவனந்தபுரம்: ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறை சென்றதால் ஸ்ரீசாந்த்தின் விளம்பர வாய்ப்பைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப் புள்ளி விழுந்துள்ளது. மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். சூதாட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.
இந்த படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
கேரள அரசின் லாட்டரி விளம்பரத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிறை சென்றதோடு சினிமா, விளம்பர வாய்ப்பையும் இழந்து தவிக்கிறார் ஸ்ரீசாந்த்.