Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
இரண்டாவது கொரோனா அலை.... மும்பையில் துவங்கியுள்ள சூட்டிங்... நடிகர்கள் ஹாப்பி!
மும்பை : கொரோனாவின் இரண்டாவது அலையால் தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
இதனால் மும்பையில் பாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மும்பையில் சூட்டிங்குகள் மீண்டும் துவங்கியுள்ளன.
மோசமான விளைவுகள்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளும் அதையொட்டி உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்பட்டன. முதல் அலையைவிட இரண்டாவது அலை மிகவும் அதிகமான கோரத்தாண்டவத்தை நடத்தியது.
தளர்வுகள் அறிவிப்பு
இதையடுத்து ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு மட்டுப் பட்டுள்ளது. உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. லாக்டவுனில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் மீண்டும் படப்பிடிப்பு
இந்நிலையில் மும்பையில் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. இதையடுத்து தங்களது வீடுகளில் முடங்கியிருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளனர். இதுகுறித்து பலர் மகிழ்ச்சியாக தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் படம் குட்பை
இதனிடையே டைரக்டர் மகேஷ் பஹி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தி படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்துவரும் நடிகை ராஷ்மிகாவும் சூட்டிங்கில் பங்கேற்று நடிக்கவுள்ளார். குட்பை என்ற பெயரில் உருவாகிவரும் இந்த படம் பாலிவுட்டில் தனக்கு சிறப்பான பாதையை அமைத்து தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.