இயற்கையை மறந்ததே ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம்: வைரல் போஸ்ட்
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் இது தான் என்று கூறி ஒரு போஸ்ட் வைரலாகியுள்ளது.
துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் பியாலி கங்குலி என்பவரின் போஸ்ட் ஒன்று வைரலாகியுள்ளது.
வாட்ஸ்ஆப்பிலும் அந்த போஸ்ட் வைரலாகியுள்ளது. அந்த போஸ்டில் கூறியிருப்பதாவது,

மரணம்
ஸ்ரீதேவி திடீர் என்று இறந்துவிட்டாரே என்று வருத்தப்படும் நாம் அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் ஒல்லியாக, 40 வயதை விட இளமையாக தெரிய வேண்டும் என்று சமூகம் விரும்பியதால் தொடர்ந்து சர்ஜரிகள் செய்து கொண்டார்.

அழகு
5 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவர் அழகாக இருந்தார். ஆனால் சாந்தினி படத்தில் பார்த்தது போன்று இல்லாமல் கவலையுடன் காணப்பட்டார். வெயிட்டை குறைக்க வேண்டும், முகத்தில் சுருக்கம் இருக்கக் கூடாது என்கிற பிரஷரால் அவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்தார்.

பாசம்
ஸ்ரீதேவியை அதிகம் விரும்பியதாக கூறிய அவரது கணவராவது தலையிட்டு அவரை தடுத்திருக்க வேண்டும். அழகு மட்டும் தான் அவருக்கு முக்கியமா? ஸ்ரீதேவியே அவரின் அழகு விஷயத்தில் அவரை நம்பவில்லை.
நம்பிக்கை
ஸ்ரீதேவிக்கு அவர் மீதே அக்கறை இல்லை. தனது உதடுகள் சரியில்லை, முகம் சரியில்லை என்று நினைத்து அழகான உடைகள் அணிய உடம்பை குறைத்துள்ளார் என்று பியாலி கங்குலி தெரிவித்துள்ளார்.

எப்படி?
பியாலி கங்குலியின் போஸ்ட்டை பார்த்த பலரும் ஸ்ரீதேவியை பற்றி எப்படி இவ்வாறு தரக்குறைவாக போஸ்ட் போடலாம் என்று கோபம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











