Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ரஜினிக்கு 'ஆனந்த தொல்லை' கொடுக்கப் போகும் பவர் ஸ்டார்
சென்னை: ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுகிறதோ அன்று தான் எனது ஆனந்த தொல்லை படத்தையும் ரிலீஸ் செய்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
லத்திகா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். லத்திகாவை யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் தான் அவருக்கு சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் பவர் கண்டமேனிக்கு பிரபலமானார்.
குவிந்த வாய்ப்புகள்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பவர் ஸ்டாருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட தனது ஐ படத்தில் பவரை புக் பண்ணினார்.
திகார் சிறை
பவர் ஸ்டார் மீது பலர் மோசடி புகார்கள் கொடுத்தார்கள். இதையடுத்து பவர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கம் போல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனந்த தொல்லை
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பவர் தான் ஹீரோவாக நடிக்கும் ஆனந்த தொல்லை பற்றி கூறியிருப்பார். அவர் ஒரே சமயத்தில் ஆனந்தத் தொல்லை, இந்திர சேனா, மூலக்கடை முருகன், தேசிய நெடுஞ்சாலை ஆகிய 4 படங்களுக்கு பூஜை போட்டார். அதில் ஆனந்த தொல்லை மட்டும் தான் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து வெளியிட தயாராக உள்ளது.
கோச்சடையான்
ஆனந்த தொல்லை படம் தான் தயாராகிவிட்டதே எப்பொழுது ரிலீஸ் செய்வீர்கள் என்று பவரிடம் கேட்டதற்கு, ரஜினியின் கோச்சடையான் என்று ரிலீஸ் செய்யப்படுமோ அன்றே எனது ஆனந்த தொல்லையும் வரும் என்று அவருக்கே உரிய ஸ்டைலில் தெரிவித்தார் பவர்.