Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
திகாரை அடுத்து பெங்களூரு சிறையில் பவர் ஸ்டார்: ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது மோசடி வழக்கில் கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதுமாக உள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அந்த சிறையில் தான் பவர் ஸ்டாரும் இருந்தார். இந்நிலையில் பவர் ஸ்டார் மேலும் ஒரு மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பவர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் உள்ளனர். தினகரனுக்கு கம்பெனி கொடுத்த பவர் தற்போது சசி இருக்கும் சிறையில் உள்ளார்.
ஹே ஹே நாங்க எல்லாம் சசிகலா இருந்த சிறையில் இருந்தோமாக்கும், அவர் எல்லாம் என் ஃப்ரெண்ட் என்று பவர் சொன்னாலும் சொல்வார். திகாரில் இருந்தபோது அங்கிருந்த தமிழக போலீசார் எல்லாம் தனது நண்பர்களாகிவிட்டதாக கூறியவர் தானே பவர்.