Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
‘தெறி‘ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன்...பவன் கல்யாணுக்கு மிரட்டல் கடிதம்!
ஆந்திரா : தெறி ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஒருவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
அட்லி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தெறி. இத்திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜக்சன்,பிரபு, நைனிகா,மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய் போலீசாக நடித்து மிரட்டி இருந்தார். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது.
லூசு மாதிரி கேள்வி கேட்காத.. நீ லூசு மாதிரி பேசாத.. விஜே மகேஸ்வரியிடமே எகிறிய தனலட்சுமி.. தெறி புரமோ

பவன் கல்யாண்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஒருவர், படத்தின் இயக்குநருக்கு தற்கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார்.

ரசிகையின் புலம்பல்
அதில், நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை அப்படியிருக்கும் போது நான் தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை. ஆனால் தெறி ரீமேக்கில் நீங்கள் நடிப்பதாக தகவல் வெளியானதை அடுத்தே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பவன் கல்யாண் அண்ணா நீங்கள் இதுபோன்ற ரீமேக் திரைப்படங்களில் நடிக்காமல், ஓர்ஜினல் படங்களில் நடியுங்கள் அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

எங்கள் உற்சாகத்தை கொன்றுவிடும்
நீங்கள் அதிகமான ரீமேக் படங்களில் நடிக்கிறீர்கள் இது எங்களுக்கு வலியைத் தருகிறது. உங்களுக்கு இன்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். பவன் கல்யாணை யாரும் சரியாகக் கையாளவில்லை இந்தப் படம் 10 வருடங்கள் நினைவில் இருக்கும், ஆனால் நீங்கள் ரீமேக் செய்ய விரும்பினால் அது எங்கள் உற்சாகத்தைக் கொன்றுவிடும்.

தற்கொலை கடிதம்
என்னுடைய சாவிற்கு பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சாவுக்கு மைத்ரி மூவிஸ் மற்றும் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் தான் காரணம் என்றும் என்னுடைய உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்கள் என தற்கொலை கடிதத்தை நடிகர் பவன் கல்யாணுக்கு டெக் செய்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து, #WeDontWantTheriRemake என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.