Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பவர்ஸ்டார் சீனிவாசன் வங்கிக் கணக்கு, சொத்துக்கள் முடக்கம்
கடன் வாங்கி தருவதாக பல லட்சங்கள் கமிஷன் பெற்று ஏமாற்றி விட்டார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகாராகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் சீனிவாசன் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனிவாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பலர் புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ஆசை அதிகரிக்கவே இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.
இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு போலீசாரின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.