Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நோ அப்ஜெக்சன் குடுக்க ‘நோ’ சொன்ன பவர் ஸ்டார்…
உசிலம்பட்டி பகுதிகளில் கார்த்திக் நடித்த படத்தின் போஸ்டர்கள்தான் ஒட்டவேண்டும் என்பது எழுதப்படாத விதி.
அந்த ஊரில் பவர்ஸ்டார் நடித்த லத்திகா படத்தின் போஸ்டரை ஒட்டியிருப்பார்கள்.
"ஏய் யாரு போட்டாவை எங்க வந்து ஒட்டியிருக்க"? என்று கூறியபடி உசிலம்பட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டோவை கிழிப்பார் ஒருவர்.
இது சுந்தரபாண்டியன் படத்தில் வரும் ஒரு காட்சி.
படம் முழுவதும் பார்த்துவிட்டு டைரக்டரிடம் கை குலுக்கிய அதிகாரிகள் 'படம் சூப்பர். கண்டிப்பா ஹிட்டாகும்' என்றெல்லாம் நம்பிக்கை வார்த்தைகளை இறைத்துவிட்டு ஒரே ஒரு நிபந்தனை போட்டார்கள்.
'படத்தின் ஆரம்பத்தில் டாக்டர் சீனிவாசனின் போஸ்டரை கிழிக்கிற மாதிரி ஒரு ஷாட் வருது. அதனால் அவருகிட்ட ஒரு நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க!'என்று கூறிவிட்டனர்.
'இதுக்கு போய் டென்ஷன் எதுக்கு. நேராவே பவர் ஸ்டாரிடம் கேட்டால் கொடுத்துருவாரு' என்று சில நண்பர்களும், 'கொடுக்காட்டி என்ன பண்ணுவே?' என்று பல நண்பர்களும் குழப்ப... தனக்கும் பவருக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு போன் அடித்து குழப்பத்தை கொட்டினார் ஹீரோ சசிகுமார்.
அந்த நண்பர் பவரிடம் பேசவே, என் போஸ்டரை கிழிப்பாய்ங்க. நான் நோ-அப்ஜெக்ஷன் தரணுமா? தரவே முடியாது. அந்த படத்தை எப்படி ரிலீஸ் பண்றாங்கன்னு பார்க்குறேன்' என்று சவால் விட்டாராம் அவர்.
இதென்னடா வம்பா போச்சு என்று அதிர்ச்சியுற்ற நண்பர், அடுத்த வினாடியே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு போன் அடிக்க, 'பிரச்சனைய விடுங்க. நான் அவருகிட்ட நம்ம வன்னியரசை பேச சொல்றேன்' என்றவர் அவரைவிட்டு பவருக்கு போன் அடிக்க... கொஞ்ச நேரத்திலேயே நண்பர் லைனுக்கு வந்தாராம் பவர்.
'இந்த சின்ன விஷயத்துக்கு அண்ணன் வரைக்கும் போயிட்டீங்களே... நேரா ஆபிஸ் போங்க. என் பி.ஏ. இருப்பார். கையெழுத்து போட்ட என் லெட்டர் பேட் ஒண்ணு கொடுப்பாரு. என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க. 'நோ-அப்ஜெக்சன் என்றாராம்.
அன்றைக்கு நோ அப்ஜெக்சன் சொன்ன பவர் ஸ்டார் இப்போது சசிகுமார் கூட நடிக்க ஆசைப்படுகிறாராம்.
போஸ்டரை கிழிச்சி ஹீரோவாக்கிட்டாங்களோ?