Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் பின்னால் கமலோ, டிடிவியோ, திமுகவோ இல்லை: விஷால்
Recommended Video
சென்னை: தன்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று நடிகர் விஷால் நினைக்கிறார்.
ஆர்.கே. நகரில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்கப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வேட்புமனு
வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜனநாயகம் எங்கே போனது. படத்தை விட நிஜத்தில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது.
கமல்
நான் கட்சி துவங்குவது குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும். என் பின்னால் கமல் ஹாஸனோ, டிடிவி தினகரனோ, திமுகவோ இல்லை. தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை பெற நினைத்து தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு இந்தியன் என்ற முறையிலேயே போட்டியிட வந்தேன்.
செல்போன்
அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது தேர்தல் அதிகாரி அடிக்கடி வெளியே சென்று செல்போனில் பேசிவிட்டு வந்தார். தேர்தல் அலுவலரை மாற்றுவதால் செய்த தவறு சரியாகிவிடுமா? ஒரு சுயேட்சை வேட்பாளரை பார்த்து ஏன்....என்று கேட்டார் விஷால்.
விஷால்
இதை எல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. விஷால் என்கிற ஒரு சுயேட்சை வேட்பாளரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். எனக்கு புரியவில்லை. கடந்த தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது என்று தேர்தலை நிறுத்தினார்கள். தற்போது ஆளை மிரட்டுகிறார்கள், தூக்குகிறார்கள் என்று நேற்று இரவு விஷால் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.