Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மதுரை கோர்ட்டில் பவர் ஸ்டார் சரண்... வேடிக்கை பார்க்க செம கூட்டம்!
மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர், கடந்த 2011ம் ஆண்டு தன்னிடம் பவர் ஸ்டார் சீனிவாசன், சொந்த தேவைக்காக 9 லட்ச ரூபாய் கடனாக பெற்றார். அதனை இரண்டு மாதங்களுக்குள் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி தரவில்லை.
கடந்த 03.01.2012 அன்று சீனிவாசன் தனது வங்கி காசோலையை கொடுத்தார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லை என்று திரும்பியது. இதையடுத்து சீனிவாசனை பலமுறை நேரில் கேட்டுபார்த்தேன். அவர் பணம் கொடுக்காததால், சீனிவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மதுரை 2வது மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு விசாரணையில் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 25ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட். இதையடுத்து நேற்று சீனிவாசன் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர், என்னிடம் வேலை பார்த்த கணேஷ் குமார், என்னுடைய ஏடிஎம் கார்டையும், என்னுடைய வங்கி காசோலையையும் திருடிக்கொண்டு சென்றுவிட்டார் என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.
இதனை வழக்கறிஞர் மூலம் மனுவாக கொடுக்குமாறு சொன்ன மாஜிஸ்ரேட், வழக்கு விசாரணையை தள்ளி வைத்ததோடு, 25ம் தேதி நடைபெறும் மறுவிசாரணையில் ஆஜராகுமாறும் பவருக்கு உத்தரவிட்டார்.
பவர் ஸ்டார் கோர்ட்டுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக் கண்டு களிக்க பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் கோர்ட் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா