Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆக்கம் படத்தில் சென்னை தாதாவாக நடிக்கிறார் பவர் சீனிவாசன்!
சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஆக்கம் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் மு களஞ்சியத்தின் உதவி இயக்குநராக இருந்த ஞானசம்பந்தன்.த
இப்படத்தின் கதாநாயகனாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பிரபல ரவுடியாக நடித்துள்ளார். ஜெயிலுக்குள் ரவுடியாக உருவாவதுபோல் இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க வடசென்னையிலேயே படமாக்கியுள்ளனர்.
இரண்டு கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த கதை.
முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.
பொங்கலுக்கு முன்பு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனெவே களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘கருங்காலி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.