Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பவர் ஸ்டார் சீனிவாசன் முன் ஜாமீன் மனு!
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமான டிராக்டரின் பதிவு எண்ணை, டாடா சுமோ காரின் பதிவெண் எனக் கூறி விற்பனை செய்திருப்பதாக திருத்தங்கல் போலீஸார் 2007 மே 30-ல் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.
ஜோதிலிங்கம் என்பவர் டாடா சுமோ காரை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு விற்றதாகவும் பிறகு அந்த கார், பாலகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால், பவர் ஸ்டார் சீனிவாசனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பவர் ஸ்டார் சீனிவாசன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.