Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ஷூட்டிங் நிறைவு... எத்தனை நாட்கள் நடந்துச்சு தெரியுமா!
சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதி புருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் பிரபாஸின் 22வது படமாக உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இயக்குநர் ஓம் ரவுத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் கடவுள் ராமராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி சனோன் ஜானகியாக நடிக்கிறார்.
103 நாட்கள் ஷூட்
இந்நிலையில் கடந்த 103 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை படக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
க்ரித்தி சனோன் ஜோடி
தற்போது படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் இயக்குநர் ஓம் ரவுத் மற்றும் க்ரித்தி சனோன் உடன் இருக்கும் படத்தை படக்குழு ஷேர் செய்துள்ளது. இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அற்புதமான பயணம் நிறைவு
இதனிடையே படக்குழுவுடன் எடுத்துள்ள போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஓம் ரவுத், ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும் ஒரு அற்புதமான பயணம் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காத்திருக்க முடியாது
மேலும் நாங்கள் உருவாக்கியுள்ள மேஜிக்கை உங்களுடன் ஷேர் செய்ய காத்திருக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புராண கதையாக உருவாகும் இந்தப் படத்தை டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
படத்தில் நடித்தவர்கள்
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கின்றார். இரட்டையர்களான சசேட்-பரம்பரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சைஃப் அலி கான், சன்னி சிங், தேவதத்தா நாகே மற்றும் வத்சல் ஷெத் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!