Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அட்லீயின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நாயகன்?
Recommended Video
சென்னை : இயக்குநர் அட்லீ தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான 'ராஜாராணி' செம ஹிட் ஆனதை அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.
விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'தெறி' ஹிட் ஆனதால் மீண்டும் விஜய்யோடு 'மெர்சல்' படத்தில் கைகோர்த்தார்.
இந்நிலையில் அடுத்து அட்லீ என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜயேந்திர பிரசாத் கதை
'மெர்சல்' படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் அட்லீ இயக்கும் அடுத்த படத்திற்கும் கதை எழுதுவார் எனக் கூறப்படுகிறது.
பிரபாஸுடன் பேச்சுவார்த்தை
விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலி படத்துக்கும் கதை எழுதினார். அவர் மூலமாகவே பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
சாஹா ஷூட்டிங்
தற்போது 'சாஹோ' படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இருப்பினும் இவை அனைத்தும் உறுதியற்ற தகவல்கள் என்பதால் அட்லீயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும்.