Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அட்லீயின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நாயகன்?
Recommended Video
சென்னை : இயக்குநர் அட்லீ தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான 'ராஜாராணி' செம ஹிட் ஆனதை அடுத்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.
விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'தெறி' ஹிட் ஆனதால் மீண்டும் விஜய்யோடு 'மெர்சல்' படத்தில் கைகோர்த்தார்.
இந்நிலையில் அடுத்து அட்லீ என்ன படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜயேந்திர பிரசாத் கதை
'மெர்சல்' படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் அட்லீ இயக்கும் அடுத்த படத்திற்கும் கதை எழுதுவார் எனக் கூறப்படுகிறது.
பிரபாஸுடன் பேச்சுவார்த்தை
விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலி படத்துக்கும் கதை எழுதினார். அவர் மூலமாகவே பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
சாஹா ஷூட்டிங்
தற்போது 'சாஹோ' படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இருப்பினும் இவை அனைத்தும் உறுதியற்ற தகவல்கள் என்பதால் அட்லீயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும்.