Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரே நேரத்தில் 10-15 வகை பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுவார் பிரபாஸ்: ராஜமவுலி
லண்டன்: டயட்டில் இல்லாத நாளில் பிரபாஸ் 15 வகை பிரியாணியை சாப்பிடத்தாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். இந்த படங்களுக்காக அவர் தனது வீட்டில் ஜிம் வைத்து உடலை கும்மென்று ஆக்கினார்.
படத்திற்காக அவர் வெயிட் போட்டார். இந்நிலையில் பிரபாஸ் பற்றி ராஜமவுலி லண்டன் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது,
டயட்
பாகுபலி படத்திற்காக பிரபாஸ் டயட்டில் இருந்தார். மாதம் ஒரு நாள் சீட் மீல் டே அதாவது டயட் கிடையாது. அன்று மட்டும் பிரபாஸ் சாப்பிடும் சாப்பாட்டை பார்க்க வேண்டுமே.
பிரியாணி
பிரபாஸ் 10 முதல் 15 வகை பிரியாணி சாப்பிடுவார். வெறும் பிரியாணி. நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அத்தனை வகை பிரியாணி இருப்பது கூட நமக்கு எல்லாம் தெரியாது.
மீன்
வகை வகையான மீன்கள், சிக்கின், மட்டன் என்று வெலுத்துக் கட்டுவார் பிரபாஸ். அவர் சாப்பிடும் வகைகளை உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சட்னி
தன் கண் முன்பு அத்தனை வகையான உணவு இருந்தாலும் சட்னி இல்லாமல் சாப்பிட மாட்டார். ஒரு நாள் இரவு 2 மணி வரை கால்பந்து விளையாடினோம். விளையாடி முடிந்த பிறகு சாப்பிட போனார் பிரபாஸ்.
மச்சான்
சாப்பாட்டை பார்த்த பிரபாஸ் தனது மச்சானிடம் சட்னி கேட்டார். அவர் வீட்டிற்கு சென்று தூங்கிய தனது மனைவியை எழுப்பி சட்னி செய்யச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். சட்னியை சாப்பிட்ட பிறகே பிற வகை உணவை சாப்பிட்டார் என்றார் ராஜமவுலி.